டிஸ்கவரி விண்ணோடம் (Space Shuttle Discovery) என்பது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் தற்போது பாவனையில் உள்ள மூன்று விண்ணோடங்களில் ஒன்றாகும்.[1] மற்றைய இரண்டும் அட்லாண்டிஸ் மற்றும் எண்டெவர் ஆகியனவாகும். 1984இல் டிஸ்கவரி விண்ணோடம் முதன் முதலில் செலுத்தப்பட்டபோது அந்நேரத்தில் பாவனயில் இருந்த மூன்றாவது விண்ணோடமாக இருந்தது. தற்போது இதுவே பாவனையில் இருக்கும் பழமையான விண்ணோடம் ஆகும். டிஸ்கவரி விண்ணில் பல ஆய்வுகளையும் அனைத்துலக விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. ஹபிள் தொலைநோக்குக் கருவி முதன் முதலில் டிஸ்கவரி மூலமே விண்ணுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
[தொகு] கடைசிப் பயணம்
கடைசியாக டிஸ்கவரி வீண்ணோடம் அக்டோபர் 23, 2007 இல் விண்ணுக்குச் செலுத்தப்பட்டது. "ஹார்மனி மொடியூல்" (Harmony module) எனப்படும் சேதங்களைத் திருத்தும் கருவிகளடங்கிய தொகுதி ஒன்றை STS-120 என்ற விண்கப்பலில் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு எடுத்துச் சென்றது. பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்ட 23வது விண்ணோடப் பயணம் இதுவாகும். அக்டோபர் 25 இல் அனைத்துலக விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது[2]. தனது 15 நாள்-பயணத்தை இது வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நவம்பர் 7, 2007 இல் புளோரிடா திரும்பியது[3].
விண்வெளி ஓடம் ஒருங்கிணைக்கப்படும் படங்கள் உங்கள் பார்வைக்கு.
உலகின் சோகமான சங்கதி எது? குழந்தை கட்டிய மணல் வீடு சரிந்து போவதா, பாசப் பறவையை பருந்து பறித்துச் செல்வதா, செல்ல நாய்க்குட்டியை எமன் எடுத்துச் செல்வதா? இருக்கலாம், இவையெல்லாவற்றைவிட சோகமானது முடியில்லாத கரடியைக் காண்பது.
ஆமாங்க. கரடிக்கு அழகே அதன் புசுபுசு முடிதான். அது வெள்ளையோ கருப்போ முடி இல்லாத கரடியை கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆனால், பார்க்க வைத்துவிட்டது இயற்கை.
ஜெர்மனி லீப்ஸிக் நகரத்தில் உள்ள லீபிங் வனவிலங்கு காட்சியகத்தில் இருந்த கரடி ஒன்றுக்கு திடீரென முடி கொட்டத் துவங்கியது. என்ன காரணம் என்று காரணம் கண்டுபிடிக்கும் முன்பாகவே அங்கிருந்த அனைத்து கரடிகளின் முடியும் கொட்டிவிட்டன. இதைப் பார்க்கும் பொதுமக்கள் அனைவரும் பரிதாபப்பட்டு ‘உச்’ கொட்டி விட்டுப் போகிறார்கள்.
கரடிகளுக்கு ஒவ்வாத ஏதோ ஒன்று தான் இந்தக் கொடிய காரியத்தை செய்திருக்கவேண்டும் என்று அனுமானித்த நிபுணர்கள் அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த வனவிலங்கு காப்பகம் இரண்டு நூற்றாண்டுகளை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கரடிகளுக்கு எப்படியாவது முடியை திருப்பி வரவழைங்கப்பா புண்ணியாப் போகும்.