!-end>!-local>
About me
Text
About Me
- sivasri
- இலங்கை திருநாட்டின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒட்டுசுட்டான் என்ற ஊரில்,இருபதாவது வயதில் நாட்டுசூழல் என்னை வவுனியாவுக்கு விரட்டிவிட்டது, உயர்தரம் வரை அங்குதான்,பின்னர் நாட்டு சூழலோடு சேர்ந்து வீட்டு சூழலும் என்னை பல்பொருள் வாணிப உரிமையாளராக்கி அழகு பார்த்தது!!!! பின் வாழ்க்கை எனும் மாய கண்ணாடியில் என் பிம்பமும் பட வேண்டும் என்பதற்காக எனக்கான ஒரு அடையாளத்தை தேடிகொண்டிருக்கிறேன்.சிறுவயதிலேயே வாழ்க்கையோடு போராட கற்றுகொண்டவன் நான்! அம்மாவை ஆழமாகவும்,உறவுகளையும் நட்பையும் மானசீகமாகவும் காதல் செய்தவன் நான். என்னை உத்தமன் என்றும் சொல்லமாட்டேன்....வாலிப வயதுக்குரிய எல்லா அட்டூளியங்களயும் செய்தும் இருக்கிறேன்.மனதில் பல ஆசைகள்,கனவுகள்,இலட்சியங்களை சுமந்து கொண்டு நீண்ட ஒரு வாழ்க்கைக்காக(லண்டன் மோகத்தால்) விமானத்தில் கால் பதித்தேன்.ஒன்றரை வருடம் இந்தியா சாப்பிட்டது பின் வந்த அரை வருடம் SINGAPORE + MALAYSIA பகிர்ந்து கொண்டது.மீண்டும் 2009 ஆண்டு கால் பதித்தேன் என் திருநாட்டில்-தொழில்தேடி அலைந்து திரிந்த எனக்கு கை கொடுத்தது ஓர் தனியார் வங்கி.ஏதோ வாழ்கை உருண்டோடுகிறது.தேடலோடு கடந்து போன பழைய நினைவுகள் நினைக்கையில்- உங்களோடு சிறியவனாய் நான்...............!!!!
பின்பற்றுபவர்கள்
©2008. All rights Reserved ஏப்ரல் 2010






Colombo Time
